your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Sunday, May 12, 2013

எது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கும் என்பதெல்லாமே ?

(தொடரின் இரண்டாம் பகுதி இது. ) முதல் பதிவு படிக்காதவர்கள் அதை படிக்க இங்கே செல்லவும்

வண்டி புறப்பட்டு ஒரு முப்பது நிமிஷங்கள் ஆகியிருக்கும் .  மணி 8 கூட இன்னும் ஆகவில்லை

அம்மா பசிக்குதம்மா என்றாள் பெண் அவள் தினப்படி பள்ளிக்கு செல்பவள் காலையில் டிபன் 7 மணிக்கே சாப்பிட்டு ஓடுபவள்

அவளுக்கு நண்பரின் மனைவி பதில் சொல்வதற்குள் ப்ரேக்பாஸ்ட் ப்ரேக்பாஸ்ட் என்று கூவிக்கொண்டு காடரிங் வந்தார்கள்

என்ன ?
இட்லி வடை தோசை பூரி சப்பாத்தி பரோட்டா எல்லாமே  இருக்கு

நண்பர் வழக்கமாக ஒன்பது மணிக்கு தான் சாப்பிடுவார்  இருந்தாலும்
சீக்கிரம் சாப்பிட்டு விடுவோம்  எப்படியும் சேலம் போவதற்கு பதினோரு மணி ஆகிவிடும்  அங்கிருந்து வீட்டிற்கு சென்று சாப்பிட மணி ஒன்றாகி விடும்
அது வரைக்கும் சாப்பிடாமல் இருக்க முடியாது. டயபெடீஸ் மருந்து வேற சாப்பிட வேண்டும் என்று அவரும் இரண்டு பூரி ஒரு மசால் வடை சாப்பிட்டார்

மற்றவர்கள் மசால் தோசை வெளுத்துக் கட்டினார்கள்.

சிரிப்பும் விளையாட்டாக அடுத்த இரண்டு மணி நேரம் கழிந்தது

இன்னும் முப்பது நிமிடத்திலே சேலம் சந்திப்பு வந்து விடும் என்று எதிர்த்த
பெஞ்சில் ஒருவர் தன மனைவிக்கு சொன்னார்

அவ்வளவு சீக்கிரமாக போகுமா என்ன என்று அவர் கேட்டார்

இன்னும் இருபது நிமிடங்கள் என்ற நேரத்தில் நண்பருக்கு மேல் வயிற்றில்
ஏதோ குடைவது போல் இருந்தது . எதுக்களிப்பது போல ஒரு உணர்வு

என்னங்க  என்னமோ நெளியறீங்க...  பயம் கலந்த குரலில் மனைவி கேட்கும்
அதே கணம் குபுக் என்று வாந்தி எடுத்தார் நண்பர்..

(தொடரும்)


எது எது எப்ப எப்ப யார் யாருக்கு நடக்கும் என்பதெல்லாமே
ஒரு கற்பனைக்கும் அப்பாற்பட்டது.

Tuesday, May 7, 2013

காந்திஜி , நேருஜி , ராஜாஜி , சோனியாஜி, ஆல் ஒகே . ஆனா அலர்ஜி யாரு ?

To keep Listeners' interest alive, we introduce from today a story feature every week.
This is the First One.    

காந்திஜி , நேருஜி , ராஜாஜி , சோனியாஜி, ஆல் ஒகே . ஆனா அலர்ஜி யாரு ?
*****************************************************************************
 ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு அணுகு முறை இருக்கிறது.
 
     அந்த மருத்துவத்தில் எந்தத் துறையில் இருந்தாலுமே .....

      உங்களது குடும்ப மருத்துவரை ஒரு தொல்லைக்காக அணுகினீர்கள் என்றா ல்    அவருக்கு உங்கள் உடல் நிலை பற்றிய பழைய தகவல்களும் தெரிந்திருக்கும்.

       அதைத்தவிர உங்களது மன நிலையும் புரிந்திருக்கும்.  அதாவது எந்த ஒரு வியாதி வந்தாலும்  அதைப் பொறுத்துக்கொண்டு மருத்துவரோடு ஒத்துழைப்பீர்களா இல்லயா என்றும் அவருக்குத் தெரிந்திருக்கும்.

        சில வியாதிகள் அக்யூட் எனப்படும். அதிக தொல்லை.  உடன் நிவாரணம் இயலும்          மற்றும் சில .. க்ரானிக். தொடர்ந்து தொல்லை தரும்.  மருந்து எடுத்துக்கொண்டாலும் பொறுமையுடன்  இந்த வியாதி அல்லது நிலைமையுடன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.

        நம்மில் பலருக்கு பொறுமை இல்லை. அதனால் வரும் தொல்லைகள் வியாதியின் கொடுமையைக் காட்டிலும் அதிகம்.

       மருந்து  கொடுப்பது மருத்துவன் கடமை.
.  ஆரோக்கியம் தருவது ஆண்டவன் அருள்.

        இருந்தாலும் சில சமயங்களில் நோயாளிக்கு மட்டுமல்ல வைத்தியருக்கும் பொறுமை இருப்பதில்லை. எதையாச்சும் கொடுத்து இரண்டே நாள்லே ரிசல்ட் காண்பிக்கவேண்டும் அப்படின்னு ஒரு மனப்பாங்கு. புதுசா எது வந்தாலும் அதை யாருக்கு தருவது அப்படின்னு யோசிக்கும்போது நம்ம வந்து மாடுவோம்னா அது நம்ம தலை எழுத்து

       இப்பொழுதெல்லாம் ஒரு குடும்ப மருத்துவர் என்ற கல்சரே மாறி வருகிறது.   நமக்கு நாமே இது தான் என்று   தீர்மானித்துக்கொண்டு அதற்கான ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரை நாடுகிறோம்.

       அவரிடமோ கூட்டம் அதிகம்.  அவர் பணமும் சம்பாதிக்கவேண்டும்.  அதே சமயம் பெயரும் எடுக்கவேண்டும்.

:அந்த டாக்டரிடம் சென்றேன் பாருங்கள். இரண்டே நாட்களில் கம்ப்ளீட் குணமாயிட்டேன்" என்று சொல்லும் நண்பர்களும் டாக்டர்களுக்கு இருக்கிறார்கள்."
இருபது வருஷம் முன்னாடி நடந்த ஒரு விஷயம் . கதை அப்படின்னு சொல்ல முடியாது   உண்மைதான் ஆனா கொஞ்சம் அங்கங்கே கலர் அடித்து இருக்கும் கதை.
       எனது  நண்பர்.  ஒரு நாள் இரவு கல்லூரி தோட்டத்தில் பஃப்ஃபே டின்னர்  பார்ட்டிலே  கலந்துகொண்டு வீட்டுக்கு வந்தார். பத்து மணி இருக்கும்.

உடலில் ஏதோ அரிப்பது போல் இருந்தது. சொறிந்து கொண்டார்.  அரிப்பு தொடர்ந்தது.  உடம்பில் பல இடங்களில் அரிப்பு தோன்றியது.  சொறிந்தால் சிவப்பாக ஆனது.

       ஏதோ விஷக்கடி போல் இருக்கிறது. என்று நினைத்துக்கொண்டார்.  நாளை உபத்திரவம் இருந்தால் டாக்டரிடம் போகலாம் என நினைத்தார்.

        இருந்தாலும் அடுத்த இரண்டு மணி நேரம் அவரது உடல் அரிப்பு எரிச்சல் தோல் தடிப்பு எல்லாமே வீட்டுலே இருக்கறவங்களை காப்ரா படுத்தி ஆம்புலன்ஸை கூப்பிடும் அளவுக்கு போய்விட்டது.

        அம்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு பிரபல மருத்துவ மனை .எப்பவுமே அங்கே தான் 24 அவர்சுமே ட்யூடி டாக்டர்.இருப்பாங்க

 வந்தவரை மருத்துவர் பரிசோதனை செய்ததில்   புரிந்து கொண்டார்.   ஏதோ ஒரு அலர்ஜி.

(அலர்ஜி என்றால் என்ன என்பது பற்றி இங்கே தக்க விவரம் உள்ளது )

அவர் உண்ட உணவில் இருக்கலாம். இல்லை, அவரை ஏதேனும் ஒரு மொசுக்கட்டை மாதிரி ஒரு பூச்சி கடித்து இருக்கலாம்.  ஏதேனும் கடித்த மாதிரி இருந்ததா எனக்கேட்டார். இவர் தெரியவில்லை.  நான் பார்ட்டிலே மும்முரமா
இருந்தேன்.  என்ன சாப்பிட்டீர்கள் என்றார்.  அவரோ ஒரு நாலு பக்கத்துக்கு ஒரு லிஸ்ட் தந்தார். வெஜ், நான் வெஜ், சமாசாரம் எல்லாமே அதில்.மீன் நண்டு, எல்லாமே இருந்தன

உடனடியாக ஒரு இஞ்ச்கஷன் போட்டார்.    அடுத்த 2 நிமிசத்தில் அத்தனை உபத்திரவமும்  அவுட் ஆகிவிட்டது.  கையில் ஒரு சீட்டு கொடுத்தார் இந்த மருந்தை நாளயிலிருந்து ஒரு மூன்று நாளைக்கு சாப்பிடுங்கள் என்றார்

நாளைக்கும் இதுபோலவே தீவிரமாக இருந்தால் கண்டிப்பாக வாருங்கள்
மருந்தை மறக்காமல் சாப்பிட்ட பின் சாப்பிடுங்கள் என்று அவர் சொன்னதை என் நண்பர் எந்த அளவில் காதில் வாங்கிகொண்டார் ?  வாங்கிக்கொண்டாரா என மருத்துவருக்கு தெரியவில்லை.

மறுநாள் காலை விடிந்தது என்றும் போல

இவரோ 100 பர் சென்ட் சரியாகத்தான் இருந்தார்  குடும்பத்தோடு அவர்கள்
எல்லோருமே அவர்கள் ஊருக்கு அன்றைய தேதியில் செல்வதாக இருந்தது
சேலத்தில் ஏதோ உறவினர் திருமணம்,

என்னங்க.. நீங்க எப்படி இருக்கீங்க..
நல்லாத்தான் இருக்கேன் அது எதோ பூச்சி கடி சுத்தமா சரியா போயிடுத்து.
இன்னிக்கு ஊருக்கு போகணுமே ... மனைவி கேட்டாள் .
நல்லாப்போலாம் ஒன்னும் பிரச்னை இல்லை என்றாராம் நண்பர்

சென்ட்ரலுக்கு போய் அங்கிருந்து சேலம் வழியாக செல்லும் ட்ரெயினில் பயணம் ஆனார்கள்.

நடு வழியில்....


(தொடரும். )

**********************************************************************************சுய புராணம்
அப்பாடி , பிட் பிட்டா  இப்படித்தான்  இனிமே கதை எழுதணும்




Thursday, May 2, 2013

Daily Calories Intake ... Thank U Appadurai Sir .

காலை6-8இரண்டு இட்லி - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (130-150)

அரை கப் (4oz) காபி அல்லது டீ அல்லது பால் (சர்க்கரை கலக்காமல்) (10-60)

1-2 கப் தண்ணீர் (8-16oz)
(140-210)
8-10இரண்டு இட்லி - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (130-150)
அல்லது
ஒரு கரண்டி (4-6 oz) வெண்பொங்கல் (முந்திரி நெய் சேராமல்) (110-130)
அல்லது
ஒரு முட்டை (80-100)

அரை கப் காபி (4oz) அல்லது டீ அல்லது பால் (சர்க்கரை கலக்காமல்) (10-60)

ஒரு வாழைப்பழம் (80-100)

1-2 கப் தண்ணீர் (8-16oz)
(170-310)
10-1250 கிராம் வேர்கடலை (230-250)
அல்லது
பட்டாணி கடலை (75-100)

1 கப் தண்ணீர் (8oz)
(75-250)
மதியம்12-2சேலட் (320-340)

75 கிராம் அரிசி சாதம் (90-100),
இரண்டு கரண்டி சாம்பார் அல்லது ரசம் (80-100),
50 கிராம் பீன்ஸ், 50 கிராம் கேரட், 50 கிராம் பருப்பு கலந்த கூட்டு (70-90),
அரை கப் (4oz) தயிர் (60-100)

1 கப் தண்ணீர் (8oz)
(620-730)
2-4அரை கப் காபி (4oz) அல்லது டீ அல்லது பால் (சர்க்கரை கலக்காமல்) (10-60) அல்லது
ஒரு கப் பழச்சாறு (சர்க்கரை சேர்க்காமல்) (100-120)
(10-120)
மாலை4-6ஒரு வாழைப்பழம் (80-100)
அல்லது
150 கிராம் திராட்சை (60-80)
அல்லது
ஒரு ஆப்பிள் (90-110)

1 கப் தண்ணீர் (8oz)
(60-110)
6-8இரண்டு இட்லி - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (130-150)
அல்லது
ஒரு சாதா தோசை (முக்காலடி விட்டம்) - மிளகாய்ப்பொடி எண்ணை இல்லாமல் அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் (90-140)
அல்லது
ஒரு சப்பாத்தி (100-130)

அரை கப் தயிர் அல்லது மோர் (60-100)

1 கப் தண்ணீர் (8oz)
(150-250)
இரவு8-10ஒரு வாழைப் பழம் (80-100)
அல்லது
150 கிராம் திராட்சை (60-80)
அல்லது
ஒரு ஆப்பிள் (90-110)

அரை கப் (4 oz) பால் சர்க்கரை கலக்காமல் (90-140)
(150-250)
( )க்குள் இருக்கும் எண்கள் கேலொரிக் கணக்கு. தேர்வு அளவு மற்றும் செய்முறைக்கேற்ப கேலொரி கணக்கு மாறும். உதாரணத்துக்கு காலை 8-10 உணவை எடுத்துக்கொள்வோம். சாதாரண மீடியம் சைஸ் இட்லி (ஒரு டேபிள்ஸ்பூன் மாவு) அறுபத்தைந்திலிருந்து எழுபத்தைந்து கேலொரிக்குள் இருக்கும். பால் கலக்காத காபி அல்லது டீ பத்து கேலொரி. கொழுப்புச் சத்து அதிகமான பால் (4oz) அறுபது கேலொரி, கொழுப்புச் சத்து குறைவான பால் முப்பது கேலொரி. ஆக காபி,டீ பத்திலிருந்து ஐம்பது கேலொரி வரை. அறுபத்தைந்து கேலொரி இட்லி இரண்டு, பால் கலக்காத காபி (4oz) கணக்குப்படி காலை முதல் உணவு 140 கேலொரியாகிறது. காபி டீ பால் எதுவும் சாப்பிடாமல், இட்லிக்குப் பதில் முட்டை சாப்பிட்டால் குறைந்த அளவுக் கொள்முதல் எண்பதுக்குக் குறைந்துவிடுகிறது. அட்டவணையில் கொடுத்திருக்கும் உணவு வகைகளை இது போல் ஒரு கேலொரி rangeக்குள் அடக்கலாம். ஐட்டங்களில் ஒன்றைக் குறைத்தால் கேலொரிக் கணக்கு இன்னும் குறைக்கலாம். மேற்சொன்ன மெனுப்படி தினமும் குறைந்த அளவு 1400 கேலொரி, அதிகளவு 2200 கேலொரி என்றாலும் இடைப்பட்ட 1700 கேலொரி அளவில் நிற்கும் என்று எதிர்பார்க்கிறே