your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Tuesday, May 26, 2009

காக்க... காக்க... இருதயம் காக்க...

Courtesy: www.dinamalar.com


காக்க... காக்க... இருதயம் காக்க...

* எனக்கு ட்ரெட் மில் டெஸ்ட் செய்து பார்த்ததில் பரிசோதனை முடிவு பாசிட்டிவ்வாக வந்தது. உடனே ஆஞ்சியோ கிராம் எடுக்க வேண்டும் என்று கூறினர். ஆனால் ஆஞ்சியோ கிராம் டெஸ்ட் நார்மலாக வந்துள்ளது. இது எப்படி சாத்தியம்?


- எம். சசிதரன், மூணாறு


ட்ரெட் மில் டெஸ்ட் என்பது ஒருவர் நடந்து கொண்டிருக்கும்போது இ.சி.ஜி.,யை பதிவு செய்யும் டெஸ்ட் ஆகும். நடக்கும்போது ஒவ்வொரு 3 நிமிடங்களுக்கும் இக்கருவியின் வேகம் அதிகரிக்கும். இதை ஸ்கிரீனிங் டெஸ்ட் என்று கூற வேண்டும். இந்த ட்ரெட் மில் டெஸ்ட் முடிவு பாசிட்டிவ்வாக வந்தால் இருதயத்தில் ரத்தநாளங்களில் அடைப்பு இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த டெஸ்ட்டின் முடிவு நூறு சதவீதம் நோயின் தன்மையை துல்லியமாக கூறும் என்று கூற முடியாது. 75 சதவீதம்தான் சரியானதாக வர வாய்ப்புள்ளது. ட்ரெட்மில் டெஸ்ட் பாசிட்டிவ்வாக இருந்தால் ஆஞ்சியோகிராம் எடுப்பது அவசியம். நவீன மருத்துவ பரிசோதனையில் இருதய ரத்தநாளங்களின் அடைப்பை துல்லியமாக கூறுவது ஆஞ்சியோகிராம் டெஸ்ட் மட்டுமே.


* நான் பல ஆண்டுகளாக வைட்டமின் இ மாத்திரையை தினமும் எடுத்து வருகிறேன். இது மாரடைப்பை தடுக்கும் என்கிறார்கள். உண்மைதானா?

- கோ. அருணாதேவி, திருவாடனை.

இன்றைய மருத்துவ வழிகாட்டுதலின்படி, பல நோயாளிகளை பரிசோதித்து பார்த்ததில் வைட்டமின் இ மாத்திரையால் மாரடைப்பிற்கோ, பக்கவாதத்திற்கோ அல்லது வேறு ரத்தக்குழாய் நோய்களுக்கோ எவ்வித பயனும் இல்லை. நீங்கள் அவசியம் ஒரு வைட்டமின் மாத்திரை எடுக்க வேண்டும் என்று நினைத்தால் போலிக் ஆசிட் (ஒரு மி.கி.) எடுத்துக் கொள்வது நல்லது. இந்த மாத்திரை ரத்தக்குழாய் நோய்களுக்கு பல வழிகளில் உபயோகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

* ஆஞ்சியோ கிராம் டெஸ்ட் செய்தால் அவசியம் பைபாஸ் சர்ஜரி சிகிச்சையில் முடியும் என்கிறார்கள் சரிதானா?

- கே.கவிதா, சாத்தூர்.


தவறான கருத்து. ஆஞ்சியோகிராம் டெஸ்ட் என்பது இருதயத்தில் உள்ள ரத்தநாளங்களில் அடைப்பு உள்ளதா என்பதை கண்டறியும் டெஸ்ட். அடைப்பு இருந்தால் எந்த இடத்தில் எத்தனை சதவீதம் உள்ளது என கண்டறியலாம். ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் 70 சதவீதத்திற்கு மேல் அடைப்பு இருந்தால் மட்டுமே பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையோ, பைபாஸ் சர்ஜரி சிகிச்சையோ தேவைப்படுகிறது. அதற்கு கீழாக இருந்தால் மருந்து, மாத்திரை மூலம் நோயை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.

* நான் ஸ்ட்ரெஸ்நில் மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். தற்போது உணவுக்குழாயில் வலி ஏற்படுகிறது. நான் மாத்திரையை நிறுத்த வேண்டுமா?

- ஆர்.பொன்னுச்சாமி, தேவக்கோட்டை.

ஸ்ட்ரெஸ்நில் மாத்திரைக்கும், உணவுக்குழாய்க்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது ஒரு லேசான தூக்க மாத்திரை. உங்களுக்கு உணவு குழாயில வலி ஏற்படுகிறது என்றால் பான் 40 மி.கி. என்ற மாத்திரையை ஒரு மாதம் எடுத்தால் வலி குறைவதற்கான வாய்ப்புள்ளது. இதன்பிறகும் குறையவில்லை என்றால் குடல் நோய் நிபுணரை பார்ப்பது நல்லது.

- டாக்டர் விவேக் போஸ், மதுரை.

No comments: